×

நவாஸ்கனி எம்பி கோரிக்கை கடலாடி கோயில் விழாவில் பால்குட ஊர்வலம்

சாயல்குடி, மே 30: கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் வைகாசி பொங்கல் திருவிழா 10 நாட்கள் நடந்தது. கடலாடி பத்திரகாளியம்மன், மாரியம்மன் கோயில் வைகாசி மாத வருடாந்திர பொங்கல் திருவிழா கொடியேற்றம், காப்புகட்டுதல், முத்து பரப்புதலுடன் கடந்த வாரம் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு பால், இளநீர், மஞ்சள், சந்தனம், பன்னீர், தேன் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. அம்மனுக்கு சுமங்கலி பூஜை நடத்தப்பட்டு மாவிளக்கு எடுத்தனர். திருவிளக்கு பூஜை, பால்குடம், அக்னிசட்டி எடுத்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல் போன்ற நிகழச்சிகள் நடந்தது. உற்சவ அம்மன் தேர் வீதி உலா நடந்தது, உரி அடித்தல், புலி வேஷம் ஆடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. 10 நாட்கள் வளர்க்கப்பட்ட முளைப்பாரியை எடுத்து பெண்கள் கடலாடியின் முக்கிய வீதிகளில் உலா வந்தனர்.

Tags : Balchuda ,Temple ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...