×

காலாவதி பொருட்கள் பறிமுதல் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமச் சாலை பணிகள் ஆய்வு

சாயல்குடி, மே 14: கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் கிராமச்சாலை உள்ளிட்ட திட்டப்பணிகளை நிர்வாக பொறியாளர் ஆய்வு செய்தார்.
கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும் கிராமச்சாலை பணிகள், ஊராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள், நூறு நாள் வேலைத் திட்ட பணிகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாக பொறியாளர் சிவராணி ஆய்வு செய்தார். நபார் வங்கி நிதியுதவியுடன் நடந்து வரும் ஒச்சதேவன் கோட்டை முதல் எம்.கரிசல்குளம் வரையிலான சாலை பணிகள், கடலாடி முதல் எம்.கரிசல்குளம் வரை நடந்து வரும் சாலை பணிகள், பிரதம மந்திரி கிராமச்சாலை மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து நடந்து வரும் காளிகோயில் கொட்டகை, அரியநாதபுரம் சாலைப்பணிகள், எஸ்.பி.கோட்டை, கொண்டுலாவி சாலை பணிகள் மற்றும் கடலாடி பகுதியில் நடந்து வரும் நூறு நாள் வேலைகள், நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நடந்து வரும் தடுப்பணைகள் கட்டும் பணிகள் உள்ளிட்ட திட்டப்பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சாலை திட்ட உதவி செயற்பொறியாளர் ஜெயராஜ், உதவி பொறியாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை