×

மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மண்டபம் மே 9: மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மண்டபம் பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. இப்பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் தார்ச்சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக இரு சக்கர வாகனத்தில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். மேலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மண்டபம் பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எந்தவித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகிறது.

இதுகுறித்து மண்டபத்தைச் சேர்ந்த அயூப்கான் கூறுகையில், ‘மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் பல்வேறு தெருக்களில் சாலைகள் சேதமடைந்தது குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபம் கடைத்தெரு சாலை, ரயில் நிலையம் செல்லும் சாலை மண்டபம் வடக்குத்தெரு சாலை என பல்வேறு இடங்களில் சாலைகள் சேதமடைந்து காணப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மண்டபம் பகுதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : hallmark ,hall ,roads ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...