கமுதி, மே 3: கமுதி அருகே அபிராமம் அகத்தாரிருப்பு பேருந்து நிறுத்தம் கமுதி-பார்த்திபனூர் மெயின் ரோட்டின் குறுக்கே மிகவும் தாழ்வான நிலையில் மின்வயர்கள் செல்கிறது. இதனால் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகிறது. பேருந்து மற்றும் அனைத்து வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்தில் செல்கின்றனர். மின் வயர்கள் நீண்டகாலமாக பழைய வயர்களாக உள்ளன. இதற்கு உடன் நடவடிக்கை எடுத்தால் தான் பேராபத்தில் இருந்து தப்பிக்க முடியும். எனவே உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் வாரியத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.