×

காடையாம்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது

காடையாம்பட்டி, ஏப்.25: காடையாம்பட்டி அருகே டேனிஷ்பேட்டை ஊராட்சி பாலமேடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் மகள் நித்யா(28). இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன், அதே பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அருண்குமார்(30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அருண்குமார் ேவலைக்கு செல்லாமல் குடித்து விட்டு, மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் பெற்றோர் வீட்டிற்கு சென்று, பணம் வாங்கி வரும்படி கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த நித்யா, கடந்த 21ம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக, நித்தியாவின் தந்தை முருகேசன், தீவட்டிப்பட்டி ேபாலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.

Tags : death ,Kodiyambadi ,
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...