×

வாழப்பாடி அருகே கிராமத்தில் சிறுத்தை புகுந்ததாக வதந்தி

வாழப்பாடி, ஏப்.24:  வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியில் நேற்று இரவு விவசாய தோட்டத்தில் சிறுத்தை நுழைந்ததாக தகவல் பரவியது. இதை அறிந்த கிராம மக்கள் பீதியடைந்து, கூட்டமாக கூடினர். இதனால் இரவு முழுவதும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி வனத்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.  பின்னர் வனத்துறையினர் கூறுகையில், இப்பகுதியில் சிறுத்தைகள் கிடையாது. செந்நாய்கள் மட்டுமே அதிகம் இருக்கிறது. இந்த நாய்கள் வாழப்பாடி அருகே முக்கியம்பாளையம் மாறிய வடக்குகாடு பகுதிகளில் கொட்டப்படும் மாட்டு இறைச்சி கழிவுகளை சாப்பிட வந்து செல்வது வழக்கம். செந்நாய்கள் தான் ஆடு, மாடுகளை கடித்து வருகிறது. எனவே மக்கள் பீதியடைய வேண்டாம். கிராமத்தை சுற்றிலும் நாங்கள் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

Tags : village ,Vaddapadi ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...