×

கற்கள் சிதைந்த மண்டபம் சாலை

மண்டபம், ஏப்.22: மண்டபத்தில் சேதமடைந்த சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள்ள விடுத்துள்
ளனர். மண்டபம் 21வது வார்டுகளை கொண்டுள்ள பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும் பேரூராட்சி நிர்வாகம் முறையாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை என மண்டபம் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் 21 வார்டுகளில் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் மண்டபம் பேரூராட்சி செல்லும் கடைத்தெரு சாலை தற்போது சேதடைந்து குண்டும் குழியுமாய் காட்சி அளிகிறது. சேதமடைந்த சாலையில் கற்கள் சிதைந்து கிடப்பதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயமடையும் அவல நிலையுள்ளது. இதனால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என மண்டபம் பகுதிய மக்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சேதமடைந்த சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Stones Mandap Road ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை