×

‘இரண்டு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பேன்’ நவாஸ்கனி நம்பிக்கை

சாயல்குடி: ராமநாதபுரம் மக்களவை தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்டபாளர் நவாஸ்கனி நேற்று தனது சொந்த ஊரான சாயல்குடி அருகே உள்ள குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு பதிவு செய்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ‘‘ராமநாதபுரம் மக்களவை தொகுதி முழுவதிலும் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். விவசாயம், மீன்பிடி, பனைமரம் தொழில் மேம்படுத்தவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுப்பேன். கூலி தொழிலாளர்கள், பெண்களுக்கு நிரந்தர வருமானத்திற்கு இப்பகுதியில் தொழில்கூடங்கள் அமைத்து தரப்படும். காங்கிரஸ் தலைமையில் மத்தியஅரசும், மாநிலத்தில் திமுக தலைமையில் அரசும் அமைந்தால் அரசின் திட்டங்களை உடனடியாக வந்து சேர்ப்பேன்’’ என்றார்.

Tags : Nawazaki ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி