×

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் அமமுக வேட்பாளர் பழனியப்பன் பிரசாரம்

தர்மபுரி, ஏப்.17: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் போட்டியிடுகிறார். அவர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று தர்மபுரி, நல்லம்பள்ளி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகளையும், வாக்காளர்களையும் நேரில் சந்தித்து, பரிசு பெட்டகம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பிரசாரத்தை இறுதியாக முடித்துக்கொண்டார். அப்போது வேட்பாளர் பழனியப்பன் பேசுகையில், 6ம் வகுப்பு தொடங்கி பள்ளி, கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு, ஆண்டுக்கு 2முறை அவர்கள் கல்வி கற்கும் வளாகத்திலேயே, மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இஸ்லாமிய சமூக பொருளாதார மற்றும் கல்வி நிலைகளையும், அவர்களுக்கான இட ஒதுக்கீடு வாய்ப்புகளையும் ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் சச்சார் மற்றும் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா குழுக்களின் அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம் அளித்து அமல்படுத்த, மத்திய அரசை அமமுக வலியுறுத்தும் என்றார். பிரசாரத்தின் போது, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, அமமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Palaniappan ,campaign ,area ,Pappirippatti ,
× RELATED மேட்டூர் அணை ஆக.15ல் திறக்க பரிந்துரை