×

சந்தன கூடு திருவிழா

சிங்கம்புணரி, ஏப். 17:சிங்கம்புணரி அருகே எஸ்.புதூர் ஒன்றியம் கரிசல்பட்டியில் 869வது மத நல்லினக்க ஹஜ்ரத் பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா கடந்த 7ம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தினம் சிறப்பு வழிபாடு நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய விதிகள் வழியாக   வலம் வந்து பீர்சுல்தான் ஒலியுல்லாஹ் தர்ஹாவை வந்தடைந்தது. தொடர்ந்து சந்தனம் பூசும் விழா நடைபெற்றது. கொடியேற்றம் தொடங்கிய நாள் முதல் அனைத்து மக்களும் மத நல்லிணக்கத்துடன் வீடுகளில் சர்க்கரை, பேரிச்சம்பழம், பழங்கள் கொடுத்து மகிழ்ந்தனர்.

Tags : Chandana Nella Festival ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை