×

குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு வேட்பாளர் நவாஸ்கனி உறுதி

ராமநாதபுரம், ஏப். 16: காரியாபட்டி பகுதிகளில் குடிநீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பிரச்சாரத்தின் போது வாக்குறுதியளித்தார். காரியாபட்டி ஒன்றிய பகுதிகளில் இராமநாதபுரம் பாரளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம் செய்தார். காரியாபட்டி கிழக்கு, மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் பகுதிகளில் ராமநாதபுரம் பாராளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் நவாஸ்கனி பிரச்சாரம் மேற்கொண்டபோது பேசியதாவது, நிலையூர் கம்பிக்குடி கால்வாய்திட்டம் நிறைவேற்றப்படும். மக்களின் தேவை அறிந்து திமுக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் ராகுல் பிரதமராகவும், தமிழகத்தில் ஸ்டாலின் முதலமைச்சராகவும் வருவது உறுதி என்றார்.

மரைக்குளம், முடுக்கன்குளம், ஆவியூர், மீனாட்சிபுரம், வக்காணங்குண்டு, காரியாபட்டி, மல்லாங்கிணர் பேரூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட நாவஸ்கனி கிராமங்கள் தோறும் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வேட்பாளருடன் ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் மணிவாசகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிதம்பரபாரதி, வர்த்தக அணி துணை அமைப்பாளர் தங்கதமிழ்வாணன், துணைச் செயலாளர் சம்பத், கலை இலக்கிய பகுத்தறிவு மாவட்ட துணை அமைப்பாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Nawazaki ,
× RELATED ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனி வெற்றி