×

மக்களை ஏமாற்றும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் வேட்பாளர் நவாஸ்கனி பேச்சு

சாயல்குடி, ஏப். 14: மக்களை ஏமாற்றும் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, நாட்டுக்கு சேவை செய்ய ராகுல்காந்தியை பிரதமராக ஆக்க வேண்டும் என நவாஸ்கனி தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் வேட்பாளர் நவாஸ்கனிநேற்று முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதியில் வாக்குகளை சேகரித்தார். முதுகுளத்தூர் பகுதி பிரச்சாரத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்ஷாமுத்துராமலிங்கம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, ராஜாகண்ணப்பன் முன்னிலை வகித்தனர். கடலாடி பகுதிக்கு திமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.

கிராம மக்களிடையே நவாஸ்கனி பேசும்போது, கிராம மக்களுக்கு 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக அதிகரிக்கப்பட்டு, தடையின்றி வேலை கிடைக்கும். விவசாய கடன், கல்வி கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். முதியோர் உதவி தொகை அதிகரித்து வழங்கப்படும். பிரதமர் மோடி பொதுமக்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றார். மோடி அக்கவுண்ட் என கணக்கு தொடங்கவும் சொன்னார். ஆனால் பணம் போடவில்லை. ஏழை மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. மக்களை ஏமாற்றும் அரசாக தற்போதைய மத்தியஅரசு உள்ளது. காங்கிரஸ் தலைமையில் மத்திய அரசு அமைந்தால் விவசாயிகளுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல்காந்தி அறிவித்துள்ளார். எனவே ஏழை மக்களை ஏமாற்றிய மோடியை வீட்டுக்கு அனுப்பி விட்டு, ஏழை மக்களை காக்கக்கூடிய தேர்தல் அறிக்கை வெளியிட்ட ராகுல்காந்தியை பிரதமராக ஆக்க வேண்டும் என பேசினார்.

Tags : Nawazaki ,government ,Modi ,
× RELATED சாலைகள் மக்களை இணைக்கிறது பாராட்டிய...