×

அறந்தாங்கி பகுதியில் நவாஸ்கனி தீவிர வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரம், ஏப்.11: ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நவாஸ்கனி வோட்டியிடுகிறார். அவர், அறந்தாங்கி பகுதியில் மனமேல்குடி, ஆவுடையார்கோவில், அறந்தாங்கி தெற்கு, அறந்தாங்கி நகரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது புதுக்கோட்டை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ ரகுபதி, முன்னாள் எம்எல்ஏ உதய சண்முகம் மற்றும் காங்கிரஸ், வி.சி., மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதல் மாலை வரை கிராமம் கிராமமாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
அப்போது நவாஸ்கனி பேசியதாவது: மத்தியில் மோடி தலைமையில் மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரியால் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். பாஜக ஆட்சியால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் கிராம புரமாணவர்கள் மருத்துவர்கள் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மத்தியில் மோடி ஆட்சியை தூக்கி எரிய எங்கள் கூட்டணியை ஆதரிக்க வேண்டும். எனக்கு நீங்கள் ஏணி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்தால் அறந்தாங்கி பகுதியில் உள்ள விவசாயிகளின் துயரை துடைக்க பாடுபடுவேன். இதபோல் அறந்தாங்கி நகராட்சி பகுதியில் அனைத்துவிதமான அடிப்படை வசதிகளை நான் நிவர்த்தி செய்து தர பாடுபடுவேன் என்று பேசினார்.

Tags : area ,Aranmangi ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...