×

நல்லம்பள்ளி ஒன்றியத்தில் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு

தர்மபுரி, ஏப்.4: நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்தில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நல்லம்பள்ளி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பி.கே.புதூர், பாறைக்கொட்டாய், மாரியம்பட்டி, கெட்டுஅள்ளி, ஈச்சம்பள்ளம், கருப்பையனஅள்ளி, அனுமந்தபுரம், தாமரை ஏரி, மல்லாபுரம், ஆண்டியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அதிமுக கூட்டணி சார்பில், பிரசார கூட்டங்கள் நடந்தது.  கூட்டங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமை வகித்தார். அதிமுக விவசாய பிரிவு தலைவர் டிஆர் அன்பழகன், பாமக மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரன், பாமக மாநில துணைத்தலைவர் சாந்தமூர்த்தி, மாநில நிர்வாகி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் வரவேற்றார்.

பிரசார கூட்டங்களில், பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், ‘இந்தியாவின் இறையாண்மையையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்த நிலையான பிரதமர் தேவை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. வலிமையான இந்தியா உருவாக, மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, மக்களின் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது,’ என்றார்.

Tags : Dhammani Ramadoss ,Nallamallai Union ,
× RELATED மருத்துவ படிப்பின் தரத்தை நீட் தேர்வு...