×

கிராமங்களில் மின்சாரம், குடிநீர் பிரச்னைகள் தீர்க்கப்படும் நவாஸ்கனி வாக்குறுதி

ராமநாதபுரம், ஏப். 3: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளை தீர்க்க பாடுபடுவேன் என திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி பொதுமக்களிடம் தெரிவித்து வாக்கு சேகரித்தார். ராமநாதபுரம், ஏப்.3: ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நவாஸ்கனி நேற்று பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மஞ்சூர், கீழக்கோட்டை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். கிராமங்களில் வெயிலையும் பாராது ஏராளமான பெண்கள் வேட்பாளரை உற்சாகமாக வரவேற்றனர். அப்போது அவர் பேசுகையில், மதசார்பற்ற திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் உங்கள் வீட்டு பிள்ளையாக ஏணி சின்னத்தில் போட்டியிடுகிறேன். அனைத்து கிராமங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்க பாடுபடுவேன் நான் இந்த மாவட்டத்தை சேர்ந்தவன். பொதுமக்கள் எந்த நேரத்திலும் என்னை வந்து சந்திக்கலாம். ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபடுவேன் என்றார். முன்னாள் அமைச்சர் தங்கவேலன், பரமக்குடி முன்னாள் எம்எல்ஏ திசைவீரன், மஞ்சூர் ஊராட்சி செயலாளர் கதிரவன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : villages ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் 636 வருவாய்...