ஆர்.எஸ்.மங்கலம், மார்ச் 28: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அன்னை நகரில் உள்ள பழைய மாணவியர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதனை சரி செய்ய பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அருகே அன்னை நகர் குருனி பச்சேரி என்ற இடத்தில் அரசு ஆதிதிராவிட மாணவியர் விடுதி இருந்தது. அந்த விடுதி கட்டிடம் பழுதடைந்ததால் அதன் அருகே அரசு புதிய கட்டிடம் கட்டி விடுதி நடந்து வருகிறது. ஆனால் பழைய கட்டிடத்தை சீர் செய்யாமலோ அல்லது அழிமானம் செய்யாமலோ அப்படியே விட்டு விட்டனர். இப்பகுதியில் உள்ள சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் அந்த கட்டிட பகுதியில் ஓடி ஆடி விளையாடுகின்றனர். ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் உள்ளே செல்கின்றது. இந்த கட்டிடத்தின் மேற்கூறை மற்றும் சிலாப்பு பகுதிகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் ஆபத்தான நிலை உள்ளது. உயிர் சேதம்,பொருள் சேதம் ஏதும் ஏற்படும் முன்பே சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.