×

உவர்நீர் இறால் வளர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம், மார்ச் 7: தமிழக அரசு மீன்வளதுறை மூலம் மத்திய அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் நீலப்புரட்சி திட்டம் 2016-17ன் கீழ் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்கள் உவர் நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இறால் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் - (1 ஹக்டேர் இறால் வளர்ப்பு குளம் அமைத்திட ஆகும் செலவினத்தொகை ரூ.7 லட்சத்தில் 50 விழுக்காடு ரூ.3.50 இலட்சம் 1 ஹெக்டேருக்கு வழங்கப்படும்) விண்ணப்பங்கள் உவர்நீர் இறால் வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களிடமிருந்து அதிகம் பெறப்பட்டால் முன்னரிமை மற்றம் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.விருப்பமுள்ளவர்கள் வரும் ஏப்.5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை