×

பயிர்காப்பீடு வழங்கா விட்டால் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் அறிவிப்பு

ராமநாதபுரம், மார்ச் 1: எம்பி தேர்தலுக்கு முன்பு பயிர்காப்பீடு தொகை வழங்கா விட்டால், தேர்தலை புறக்கணிக்க போவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் வீரராகவராவ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகள், வேளாண்மை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கலெக்டர் வீரராகவராவ் பேசுகையில், 2017-18க்கான பயிர்காப்பீடு இன்சூரன்ஸ் தொகை வராமல் இருப்பது வருத்தப்பட வேண்டிய விஷயம். பணம் தாமதத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனமே பொறுப்பு. குறைவாக கொடுப்பதை விவசாயிகள் ஏற்கமாட்டார்கள் என தெரிவித்து விட்டோம் என்றார். திருவாடானை மங்களகுடி விவசாயி ராஜேஷ் பேசுகையில், மங்கள்குடி கிராமத்தை தனிபிர்க்காவாக பிரித்ததால் 2016-17க்கான இன்சூரன்ஸ் தொகை மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வந்துள்ளது. யார் உத்தரவின் பேரில் தனிபிர்க்காவாக பிரித்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

கமுதி முன்னாள் அதிமுக கிளை செயலாளர் ராமையா பேசுகையில், எல்லா மாவட்டத்திலும் இன்சூரன்ஸ் தொகை கொடுத்து விட்டார்கள். ராமநாதபுரம் மாவட்டம் மட்டும் தான் கொடுக்கவில்லை. வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போகிறோம். அப்போதாவது ஆட்சியாளர்கள் விவசாயிகளை பற்றி சிந்திக்க வேண்டும் என்றார். அமமுக மாவட்ட செயலாளர் ஆனந்த் பேசுகையில், கடந்த 4 கூட்டங்களிலும் காப்பீடு தொகை வரும் என்று தான் கூறுகிறீர்கள் எப்போது வரும் என சொல்லவில்லை. இன்சூரன்ஸ் தொகை எப்போது வரும் தேதியை சொல்லி உத்தரவாதம் தாருங்கள் நாங்கள் அதை பற்றி பேசவில்லை என்றார். ஆர்.எஸ்.மங்கலம் விவசாயி மனோகரன், காப்பீடு தொகை வழங்காவிட்டால் விவசாயிகள் தேர்தல் புறக்கணிப்பு செய்வோம் என்றார். கூட்டத்தில் கலந்த கொண்ட விவசாயிகள் ஏராளமானோர் தேர்தலுக்கு முன் இன்சூரன்ஸ் தொகை கிடைக்காவிட்டால், எம்பி தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்று பேசினர்.

Tags : Farmers Announce Meeting ,Elections ,
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள...