ஆத்தூர், பிப்.12:பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கருமந்துறை கிராமத்தில் திமுக ஊராட்சி சபை கூட்டம், ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மலை கிராம பெண்கள் கலந்துகொண்டனர். தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் ஒரு மாதம் விட்டு ஒரு மாதம் தான் வழங்கப்படுகின்றன. எங்களின் விளை பொருட்களை வெளி மார்க்கெட்டிற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் பல்வேறு இடையூறுகள், இடைதரகர்களின் ஆதிக்கம் உள்ளதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கருமந்துறையை தலைமையிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. குடிநீர் தட்டுப்பாடு, முதியோர் உதவி தொகை நிறுத்தம் ஆகியவைகளை பற்றி கூறினார்கள். தொடர்ந்து பேசிய திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சேகர், மலைவாழ் மக்களின் குறைகளை அனைத்தையும் உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முகமதுஈசாக், அசோகன், அப்துல்லா, மாது ராஜூ, சாந்தி முத்துலிங்கம், வெள்ளாளப்பட்டி மூர்த்தி, பனமடல் சிங்காரம், கொட்டவாடி ராமசாமி, கிருஷ்ணன், விமல் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.