×

எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கட்சி தொண்டருக்கு நிதியுதவி அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்

பரமக்குடி, பிப்.12: பரமக்குடியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி மூத்த தொண்டர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதிஉதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக இலக்கிய அணி சார்பாக முன்னாள் முதல்வர் எம்.ஜி,ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் நகர் செயலாளர் ஜமால் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் திசைநாதன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மணிகண்டன், அதிமுகவை சேர்ந்த மூத்த நலிந்த கட்சி தொண்டர்கள் 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியினை வழங்கினார்.
மேலும்10 பெண்களுக்கு தையல் இயந்திரம், இஸ்திரி பொட்டி, நகர் பகுதியில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள நலிந்த அதிமுக உறுப்பினர்கள் 500 பேருக்கு ேவட்டி,சேலைகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மணிகண்டன் பேசும்போது, அதிமுக கட்சியை யாராலும் அசைக்க முடியாது. பரமக்குடி தொகுதியில் எம்.எல்.ஏ. இல்லாவிட்டாலும் உங்களுக்காக நான் இருக்கிறேன், திருவாடானை தொகுதியில் எம்.எல்.ஏ. இருந்தும் பயனில்லை. இந்த பகுதி மக்களுக்கு தேவையான திட்டங்களை நான் செய்து வருகிறேன். மத்திய அரசு ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டத்தை பெயரளவில் தத்த எடுத்து எந்தவிதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை என்றார்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி முத்தை, நயினார்கோவில் குப்புசாமி உள்ளிட்ட கட்சியினர் சிறப்புரையாற்றினார்கள்,முடிவில் இலக்கிய அணியின் மாவட்ட செயலாளர் திலகர் நன்றி கூறினார்.

Tags : MGR ,Manikantan ,meeting ,
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...