×

காடையாம்பட்டி அருகே 8 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் நூலகத்தை திறக்க கோரிக்கை

காடையாம்பட்டி, பிப்.7: காடையாம்பட்டி அருகே, 8 ஆண்டாகியும் பூட்டியே கிடக்கும் நூலக கட்டிடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 காடையாம்பட்டி அருகே, தும்பிபாடி ஊராட்சியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, கடந்த 10 ஆண்டுக்கு முன் நூலகம் கட்டப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடைந்து 8 ஆண்டுகளாகியும் இன்றுவரை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் போட்டித்தேர்வுக்கு நூல்களை படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். நூலகம் பூட்டியே கிடப்பதால், இரவு நேரங்களில் மது அருந்துதல், சீட்டாடுதல் போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. எனவே, இந்த நூலக கட்டிடத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு திறந்து, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kodiyambadi ,
× RELATED காடையாம்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவன் கைது