×

அணைப்பாளையம் அருகே ஆபத்தான வளைவில் அதிகரிக்கும் விபத்துக்கள்

க.பரமத்தி ஜன.31: அணைப்பாளையம் அருகே ஆபத்தான வளைவில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் தடுப்பு கம்பிகள் அல்லது வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம், அணைப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட இடத்தில் கரூர் சின்னதாராபுரம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இச்சாலை வழியே சின்னதாராபுரம் மூலனூர், தாராபுரம், பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் அணைப்பாளையத்தில் மிகவும் ஆபத்தான வளைவு உள்ளது. இதனால் அதிக விபத்துகள் நடக்கின்றன. இப்பகுதியில் வளைவு பாதை இருப்பதாலும், சாலைகள் மிகவும் குறுகியதாக இருப்பதாலும் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதி மக்கள் பயணிகள் நீண்ட நாட்களாக இங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது தடுப்பு கம்பிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால்,இங்கு அமைக்க வேண்டிய வேகத்தடை தனியார் பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எவ்வித பலனும் இல்லை. டூவீலர்களில் செல்பவர்கள் அடிக்கடி இந்த வளைவில் விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். எனவே அணைப்பாளையம் ஆபத்தான வளைவில் தடுப்பு கம்பிகள் அல்லது வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,ridge ,Adiyapalayam ,
× RELATED கல்பாக்கம், மதுராந்தகத்தில் நிகழ்ந்த...