×

கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை, மே 15: கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் கம்பு சாகுபடியில் பூட்டு பெற்று உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்். சிறுதானிய பயிர்களில் மிகவும் முக்கியமான சத்து மிகுந்த பயிராக கம்பு உள்ளது. தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் உணவு பயிர்களில் நெல், சோளத்துக்கு அடுத்துபடியாக கம்பு பயிரை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த நீர் வளம், மண் வளம் உள்ள இடங்களில் கம்பு பயிர் செழித்து வளரக்கூடியது என்றும், உணவு தன்மைகளிலும் மற்ற தானியங்களை விட அதிகமான சத்து பொருட்களை பெற்றது என்றும் தெரிவிக்கின்றனர்.

கம்பு தானியமாக இருப்பதோடு இதன் தட்டை பகுதிகள் கால்நடைகளுக்கும் நல்ல தீவனமாகவும் உள்ளது. அரிசியை மட்டுமே உண்பதால் ஏற்படும் சத்து குறைபாடுகளை போக்குவதற்கு கம்பு மிகச்சிறந்த தானியமாக இருப்பதாக முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர்.

கம்பில் வீரியம் ஒட்டு ரகங்கள், கம்பு கோ(சியு)9, கம்பு வீரிய ஒட்டு (சியு)9 போன்ற ரகங்கள் உள்ளது. இதில் கோ (சியு)9 மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் வீரிய ஒட்டு (சியு)9 ஆகிய ரகங்கள் ஜுன், ஜுலை மாதங்களில் பயிரிடுவதற்கு ஏற்றதாகும் என்றும், மானாவாரியில் ஆடிபட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் இறவை பாசனத்தில் மாசிபட்டம், சித்திரை பட்டங்களிலும் பயிரிடலாம் என்று முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும் என்றும் இதில் சால் விதைப்பு முறை பரவளாக நடைமுறையில் உள்ளதால் அளவுகள் மாறுபடும். விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதையுடன் மெட்டலாக்சில் 6 கிராம் என்ற விகிதத்தில் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக விதை நேர;த்தி செய்ய வேண்டும். விதைப்பதற்கு சற்று முன்பு அசோஸ் பைரில்லாம் கலந்தபின்பு விதைக்க வேண்டும். விதைக்கும் போது வரிசைக்கு வரிசை 45 செ.மீ இடைவெளியும், செடிக்கு செடி 15 செ.மீ இடைவெளியும் இட வேண்டும் என்று கூறுகின்றனர்.

உரம் இடும்போது மானாவாரி நிலத்தில் 12.5 டன் (ஒரு ஹெக்டேருக்கு) தழைசத்து 40 கிலோ, மணிசத்து 20 கிலோ அனைத்தும் அடி உரமாக இட வேண்டும். விதைக்கப்பட்டதில் இருந்து 2வது வாரத்தில் களை எடுக்க வேண்டும். அப்போது பயிருக்கு பயிர் 15 செ.மீ இடைவெளி இருப்பதுபோல் களை எடுக்க வேண்டும். பொதுவாக 15வது மற்றும் 30வது நாளில் களை எடுக்க வேண்டும். 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுதல் வேண்டும்.

பயிரை பாதுகாக்கும்போது குருத்து ஈக்களை கட்டுப்படுத்த 5 சதவீதம் வேப்பங்கொட்டை சாறு தெளிக்க வேண்டும். கதிர் நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த 25 கிலோ கார்பரில் 5 சதவீதம் மாலத்தியான் ஆகியவற்றை பூ எடுக்கும் சமயத்தில் தூவ வேண்டும். மேலும் அடிசாம்பல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஹெக்டேருக்கு 500 கிராம் மெட்டாலாக்சில் அல்லது 1 கிலோ மேன்கோசெப் தெளிக்க வேண்டும். துரு நோயை கட்டுப்டுத்துவதற்கு ஒரு ஹெக்டேருக்கு நனையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மேன்கோசெய் 1 கிலோ தெளிக்க வேண்டும். தேவைபட்டால் 10 நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு பாதுகாக்கப்பட்ட கம்பு பயிர;களின் இலைகள் மஞ்சல் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தை தரும் தானியங்கள் கடினமாக இருக்கும்.

அப்போது கதிர;களை தனியாக அறுவடை செய்ய வேண்டும். அதனை தொடர;ந்து ஒரு வாரம் கழித்து கம்பு பயிர; தட்டையை வெட்டி நன்றாக காயவைத்து கால்நடை தீவனங்களுக்காக சேமிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர;. மேற்படி கம்பு பயிரை பயிரிட்டால் விவசாயிகள் நல்ல லாபம் பெறலாம் என்றும் முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

The post கடவூர், தோகைமலை பகுதியில் கம்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் appeared first on Dinakaran.

Tags : Kadavur, Thokaimalai ,Thokaimalai ,Kadavur ,Karur district ,Tamil Nadu ,Kadavur, Tokaimalai ,
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்