ராமநாதபுரம், ஜன.30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் அரசியல் விளக்க கூட்டம் ராமநாதபுரம் அரண்மனை முன்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர, ஒன்றிய செயலாளர் களஞ்சியம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ஆதம் முகைதீன், ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முருகபூபதி பேசுகையில், கடல் அட்டை மீதான தடையை நீக்க வேண்டும், அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் அனைத்தையும் அனைவருக்கும் பாகுபாடின்றி கிடைக்கச் செய்திட வேண்டும் என்
றார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜன், துணைச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் ஜீவா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.