ராமநாதபுரம், டிச.16: உச்சிப்புளி அருகே அரியமான் கடற்கரை பகுதியில் வருகிற 19ம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்ட அளவிலான கடற்கரை கால்பந்து, கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. போட்டிகள் ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் நடத்தப்படவுள்ளது.
முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.500ம், இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.350ம், மூன்றாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ.200ம் பரிசுத் தொகை வழங்கப்படும் என கலெக்டர்(பொ) முத்துமாரி கூறினார்