×

வங்கி மேலாளர் போல் நடித்து முதியவரிடம் ₹98,000 அபேஸ்

இளம்பிள்ளை, நவ.28: இளம்பிள்ளை அருகே வங்கி மேலாளர் போல் நடித்து முதியவரிடம் ₹98 ஆயிரம் அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கேகேநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (61). இவர் இரும்பாலையில் ஆப்ரேட்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது செல்போனுக்கு கடந்த 18ம் தேதி வங்கி மேலாளர் பேசுவதாகவும், தங்களுடைய ஏடிஎம் எண்ணை கொடுக்குமாறும் மர்ம நபர் பேசியுள்ளார். அதை நம்பி பெரியசாமியும் நம்பரை கொடுத்துள்ளார். இந்நிலையில், அவருடைய செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது.

அதில் ₹98 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது. அதையடுத்து இரும்பாலை எஸ்பிஐ வங்கி மேலாளரிடம் அவர் புகார் செய்தார். பின்னர் சேலம் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பணத்தை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags : bank manager ,
× RELATED ஒட்டன்சத்திரத்தில் கடன் பிரச்னையால்...