×

ஒட்டன்சத்திரத்தில் கடன் பிரச்னையால் வங்கி மேலாளர் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை முயற்சி: ஒருவர் பலி; 2 பேர் சீரியஸ்

ஒட்டன்சத்திரம்: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் (59). இவரது மனைவி உமா கோமதி (50), மகன் சிவபிரபாகர் (27). ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு வங்கியில் மேலாளராக பணி புரிந்து வந்த முத்துராமலிங்கம், 2 மாதங்களுக்கு முன் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது ஒட்டன்சத்திரம் ஆத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடன் பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முழுவதும் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதனால், அருகில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து நேற்று மாலை வீட்டை உடைத்து பார்த்தனர். அப்போது மூவரும் மயங்கிய நிலையில் இருந்தனர். உடனே அவர்களை மீட்டு, ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உமா கோமதி  உயிரிழந்தார். முத்துராமலிங்கம், சிவபிரபாகர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் முத்துராமலிங்கம், உமா கோமதி, சிவபிரபாகர் ஆகியோர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் பூச்சி மருந்தை குடித்தது தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். …

The post ஒட்டன்சத்திரத்தில் கடன் பிரச்னையால் வங்கி மேலாளர் குடும்பத்தினர் 3 பேர் தற்கொலை முயற்சி: ஒருவர் பலி; 2 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Othanchatram ,Muthuramalingam ,Kovilpatti, Thoothukudi district ,Uma Gomathi ,Siva Prabhakar ,Otanchatra ,
× RELATED வடமதுரை- ஒட்டன்சத்திரம் சாலையோரம்...