ஆர்.எஸ்.மங்கலம், நவ. 23: கஜா புயலின் தாக்குதலில் தஞ்கை, நாகபட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பகுதி மக்களுக்கு தினமும் பல்வேறு அமைப்பினர் நிவாரண பொருள்கள் கொடுத்து வருகின்றனர். ஆர்.எஸ்.மங்கலம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னோற்ற கழகம் சார்பில் பல லட்சம் ருபாய் மதிப்பிலான பொருள்கள் மாநில செயலாளர் சாதிக் பாட்சா தலைமையில், நகர் தலைவர் அப்துல் ரஹ்மான், அகமது ஜமீர், செயலாளர் கிர்ஷாத் முன்னிலையில் நேற்று வழங்கப்பட்டது.
ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருள்கள், மொழுகுவர்த்தி, கொசுவர்த்தி, எண்ணை சோப்பு உள்ளிட்டவை 300 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது. கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் நேரில் சென்று பொருள்களை வழங்கினர்.