×

உலக மீனவர் தினத்தில் பெண்கள் பேரணி

ராமேஸ்வரம், நவ. 22: தங்கச்சிமடத்தில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நேற்று ஒன்றிய மீனவர் மக்களமைப்பு சார்பில் ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதையொட்டி புனித தெரசாள் மேல்நிலைப்பள்ளி முன்பு துவங்கிய மீனவப் பெண்களின் ஊர்வலத்திற்கு மண்டபம் ஒன்றிய மீனவ மக்களமைப்பு தலைவி மோட்சராக்கினி தலைமை வகித்தார். பல்நோக்கு சேவா சங்க ராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார்.

நகரின் முக்கிய வீதிகளின் சென்ற ஊர்வலம் தங்கச்சிமடம் சமுதாயக் கூடத்தை சென்றடைந்தது. தொடர்ந்து சமுதாயக் கூடத்தில் மீனவ தின கருத்தங்கம் நடைபெற்றது. ஆரோக்கியபுனிதா வரவேற்றார். மோட்சராக்கினி தலைமை வகித்தார். பாதிரியார் ஜெபமாலைராஜ், மீனவ மகளிர் தலைவி இருதயமேரி, மீனவர் சங்க தலைவர் சேசு, நாட்டுப்படகு மீனவர் நிர்வாகி சிப்பிசேசு, ராமேஸ்வரம் நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் தில்லை பாக்கியம், தங்கச்சிமடம் நுகர்வோர் அறக்கட்டளை நிர்வாகி முருகேசன் ஆகியோர் பேசினர். மேரியூஜின் நன்றி தெரிவித்தார். ஏராளமான மீனவ பெண்களும், மீனவர்களும் பங்கேற்றனர்.

Tags : Women ,World Fisher Day ,
× RELATED பள்ளிகொண்டா அருகே முந்தி செல்ல முயன்ற...