×

பார்த்திபனூரில் மணல் கொள்ளை டிப்பர் லாரி பறிமுதல்

பரமக்குடி, நவ.14:  பரமக்குடி அருகே பார்த்திபனூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல்  கொள்ளையில் ஈடுபட்டதாக இரண்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர்  வருவாய்க்கு உட்பட்ட கிராமங்களில் மணல் கொள்ளை கொடிகட்டி பறக்கிறது. மணல்  கொள்ளையில் ஈடுபடுபவர்களை போலீசார் பிடித்து சப் கலெக்டரிடம்  ஒப்படைத்தாலும், அரசுக்கு கட்ட வேண்டிய அபராதத்தை கட்டி லாரியை எடுத்து வந்து  மீண்டும், மீண்டும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று எஸ்.ஐ  நாகநாதன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, நரிக்குடி  அருகே மணல் கொள்ளையடித்து  பார்த்திபனூர் வந்த டிப்பர் லாரியை மடக்கிபிடித்தார். இவர் கொடுத்த  புகாரின் பேரில் அபிராமத்தை சேர்ந்த முர்த்தி, மலைக்கண்ணன் ஆகியோர் மீது  வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டு  கோட்டாட்சியர்  அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Tags : Sandy ,
× RELATED நிறம் மாறும் உலகில் படத்தில் 4 ஹீரோக்கள்