ராமநாதபுரம், நவ.1:தேங்கி நிற்கும் தண்ணீரால் சாலையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ராமநாதபுரம் வன சங்கரி அம்மன் கோவில் தெருவில் மழை பெய்து பல நாட்களாகியும் தண்ணீர் ஓட முறையான கால்வாய் வசதி இல்லை. இதனால் ரோட்டில் தேங்கியுள்ள மழைநீர் கழிவு நீராக மாறி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. நடந்து செல்ல முடியாத நிலையில் பலகை, செங்கல் பாலம் அமைத்து மக்கள் சாலையை கடந்து செல்கின்றனர். தேங்கிய நீரில் கொசுக்கள் உருவாகி கடிப்பதால் அருகே வசிப்பவர்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.