×

தேவர் குருபூஜையில் வேல் எடுத்து வந்த இளைஞர்கள்

சாயல்குடி, அக். 31:   கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழா கடந்த 28ம் தேதி ஆன்மீக விழா யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு பூஜைகளும், திருவிளக்கு பூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் யாகசாலை பூஜை, ஆன்மீகசொற்பொழிவு, பஜனை, கூட்டு பிரார்த்தனையுடன் லட்சார்ச்சனை நடந்தது. மூன்றாம் நாளான நேற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் பால்குடம், முளைப்பாரி, காவடி, அலகு குத்தி, வேல் எடுத்து வந்து தேவர் நினைவிடத்தில் செலுத்தினர்.

Tags : Velu ,
× RELATED குடிநீர் தொட்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி