×

வீசி எறியும் உணவை சாப்பிடும் அவலம் மழைநீர் அகற்றம் பஸ் பயணிகள் கடும் அவதி

ராமநாதபுரம், அக்.23:  ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர் விடுமுறைக்கு பின் நேற்று ராமநாதபுரத்திற்கு பல ஊர்களில் இருந்து வெளியூர் செல்ல வந்தவர்கள் பஸ் இல்லாமல் அவதிப்பட்டனர். நேற்று மாலை 4.45 மணியளவில் ராமநாதபுரத்திலிருந்து பால்கரை வரை செல்லும் அரசு டவுன் பஸ்சை பரமக்குடி செல்ல ரூட்டை மாற்றிய நிலையில், அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலர் பஸ்சை விட்டு இறங்க மாட்டோம் என கூறியதையடுத்து மீண்டும் பால்கரை கிராமத்திற்கு இயக்கப்பட்டது.

தொடர்ந்து ஏர்வாடி செல்வதற்காக பயணிகள் ஏற்றிய நிலையில் பஸ் போகாது என கூறி, உடனே போர்டில் பரமக்குடி என ஓட்டி மாற்றிய நிலையில் அதிகாரிகள் பரமக்குடி செல்ல உத்தரவிட்டனர். இதனால் ஏர்வாடி செல்லும் பயணிகள் அடுத்த பஸ் வரும் வரை காத்திருந்தனர். முகூர்த்த நாட்கள், விடுமுறை தினங்களில் கூடுதலாக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags : draining ,
× RELATED மாவட்டம் முழுவதும் நீர்நிலைகள் வறண்டதால் கடும் குடிநீர் பஞ்சம்