ராமநாதபுரம், அக்.12: கணவர் கண் முன்னே லாரி மோதி மூதாட்டி பலியானது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி கட்டையன் வலசை பகுதியை சேர்ந்தவர் ஆண்டி. மனைவி ராக்காயி(70). இவர்கள் நேற்று கடற்கரைக்கு சென்று கரைவலை போட்டு மீன்களை பிடித்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பினர். கணவர் முன்னே செல்ல பின்னால் ராக்காயி நடந்து வந்துள்ளார். அப்போது தென்னை தென்னை கிடுகளை ஏற்றி வந்த மினி லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ராக்காயி உயிரிழந்தார். திருப்புல்லாணி போலீசார் லாரியை ஓட்டி வந்த கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த வெங்கடாச்சலம் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.