×

கருப்பண்ணசாமி கோயிலில் பனை ஓலையில் அன்னதானம்

கீழக்கரை, அக்.10:  ஏர்வாடி வெட்டமனை பாதாள கருப்பண்ணசாமி கோயிலில் நேற்று முன்தினம் பனை ஓலையிலான பட்டையை தட்டாக பயன்படுத்தி அன்னதானம் நடைபெற்றது. ஏர்வாடி வெட்டமனையில் பாதாள கருப்பண்ணசாமி பீடம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் காலை 9 மணியிலிருந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது. ஓலை பெட்டியில் நெல்லை குவித்து வைத்து திரிசூலத்திற்கு தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் உலக நன்மைக்காக கூட்டு பிரார்த்தனை செய்யப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பனை ஓலையிலான பட்டையில் கறிசோறு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Annadhanam ,
× RELATED ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை...