சென்னை: புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஆணையத்தை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேரில் விசாரணை நடத்தி இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.