×

வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் சேகரிப்பு

வேங்கைவயல் : வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் இன்று சேகரிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்த 8 பேருக்கும் கண்டிப்பாக சோதனை மேற்கொள்ளப்படவேண்டும் என புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்புச்சட்ட நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் இன்று 8 பேரின் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்ட பின், தொடர்ந்த விசாரணையின் அடிப்படையில் சந்தேகமுள்ள 11 பேரின் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுமதி பெற்றதை அடுத்து, 3 பேரின் சோதனை மட்டும் நிறைவடைந்த நிலையில், 8 பேரும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், இன்று 8 பேருக்கும் டிஎன்ஏ சோதனை செய்வதற்கான ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

The post வேங்கைவயல் விவகாரம்: டிஎன்ஏ சோதனைக்கு மறுத்த 8 பேரின் ரத்தம் சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : VENGAIVAL ,VENGAIVAIL ,Vengayvial ,Pudukkotta Vengaivail ,Bengal ,
× RELATED வேங்கைவயல் விவகாரம்: மேலும் 6 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை.! சிபிசிஐடி முடிவு