திருமயம் : புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கல்லூர் அரியநாயகி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நேற்று நடைபெற்றது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரம் காளைகள் பங்கேற்றன. காளைகளை விரட்டி பிடிக்க முயற்சி செய்த போது ஒரு சில இளைஞர்களிடம் பிடிபட்ட நிலையில், பெரும்பாலான காளைகள் தப்பித்து பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் ஓடியது. காளைகள் முட்டியதில் 74 பேர் காயமடைந்தனர்.
இதில் ஆலங்குடி அண்ணாகரை சேர்ந்த சிவகுமார் மகன் சிவபாரதி (20) மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
