தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்தார். திருச்செந்தூர் கோயில் திருவிழா வரும் 7-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார். வரும் 16ம் தேதி நடைபெற உள்ள மாசி தேரோட்டத்திலும் பக்தர்கள் பங்கேற்க அனுமதி என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
