×

காவல்துறை எச்சரிக்கை சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

சென்னை: தமிழக காவல்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போல் தங்களை பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபோன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தமிழக காவல்துறை கேட்டுக்கொள்கிறது. இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : activity , Police warning Strict action against those involved in illegal activity
× RELATED கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில்...