×

கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை சுகாதார துணை இயக்குநர் ஆய்வு

பாவூர்சத்திரம்,பிப்.6: கீழப்பாவூர் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை தென்காசி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் முரளிசங்கர் ஆய்வு செய்தார். அப்போது அவர் டெங்கு கொசுப்புழு ஒழிப்புபணி, புகை மருந்து அடித்தல், குடிநீரில் குளோரினேசன் ஆய்வு செய்வது தொடர்பாக களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் கூறினார். ஆய்வின்போது கீழப்பாவூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூலநாதன், கீழப்பாவூர் பேரூராட்சி செயல்அலுவலர் மாணிக்கராஜ் , சுகாதார மேற்பார்வையாளர், டெங்கு மஸ்தூர் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post கீழப்பாவூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை சுகாதார துணை இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Deputy Director ,Health for Dengue Fever Prevention Activity ,Kalapavur Metropolitan Region ,Pawoorsatram ,Dr. ,Muralisankar ,Tenkasi Health District ,Kalapawur Metropolitan Government ,Deputy Director of ,Health for ,Dengue ,Prevention Action ,Dinakaran ,
× RELATED கர்ப்பிணிகள் தனியாக வெயில் நேரத்தில்...