கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயக்குனர்கள், நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முடிவெடுத்து அறிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகர் உதயா தற்போது தான் நடித்து வரும் அக்னி சாட்சி, மாநாடு படங்களில் சம்பளத்தில் 40 சதவிகிதம் விட்டுக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். அதேபோல வில்லன் மற்றும் குணசித்ர நடிகரான அருள்தாஸ் 2020 டிசம்பர் மாதம் வரை தான் நடிக்கும் படம் எதற்கும் சம்பளம் வாங்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கிறார்.
“நான் பலகோடிகள் சம்பாதிக்கும் நடிகனில்லை சாதாரண நடிகன் தான், எனக்கும் தேவைகள் இருக்கிறது. ஆனாலும் இந்த இக்கட்டான சூழலில் நான் சார்ந்த திரையுலக முதலாளிகளுக்கு கைம்மாறாக இதைச் செய்வதில் மன நிறைவைத்தரும்” என்கிறார் அருள்தாஸ்.