கன்னடத்து பைங்கிளி என்று பழம்பெரும் நடிகை சரோஜாதேவியை குறிப்பிடுவார்கள். தற்போது கன்னடத்து கிளியாக தமிழுக்கு வந்திருக்கிறார் ராஷ்மி கோபிநாத். எம்பிஏ படித்து மாடலிங் துறையிலிருந்தவர் காக்டெய்ல் படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து நடித்திருக்கிறார்.
அவர் கூறும்போது, ‘காக்டெய்ல், சி.வி.குமார் தயாரிக்கும் வைரஸ் படங்களில் நடிப்பதுடன், கன்னடத்தில் பாத்ரா, தெலுங்கில் டப்பே டப்பு படங்களில் நடிக்கிறேன்.
காக்டெய்ல் படத்தில் யோகிபாபுவுடன் நடிக்கும்போது திடீரென்று காமெடி பஞ்ச் அடித்து சிரிக்க வைத்துவிடுகிறார். இதனால் அவருடன் நடிப்பதற்கு முன் கோபமான ஒரு சம்பவத்தை நினைத்துக்கொண்டுதான் நான் நடிக்கிறேன்’ என்றார் ராஷ்மி.