×

ஒரே வருடத்தில் கணவரை பிரிந்த சுவேதா பாசு

சிறுவயது முதல் நடிக்கும் நடிகைகளில் ஒருவர் சுவேதா பாசு. 2002ம் ஆண்டு இவர் நடித்த மக்தீ இந்தி படத்தில் சிறந்த நடிப்பை வெளியிட்ட தற்காக குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது வென்றார். மேலும் சில இந்தி படங்களில் நடித்தவர் பின்னர் தமிழில் நடிக்க வந்தார். ஒரு முத்தம் ஒரு யுத்தம், மெய், சந்தமாமா, ரா ரா போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து ரைடு, பிரியுடு போன்ற உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு மும்பை திரையுலகை சேர்ந்த ரோஹித் மிட்டல் என்பவரை காதலித்து மணந்தார் சுவேதா பாசு. திருமணம் முடிந்து ஒரு வருடமே ஆன நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர்.

இருவரது சம்மதத்துடன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள சுவேதா பாசு, ‘நானும் ரோஹித் மிட்டலும் இருவரின் சம்மதத்தின் பேரில் திருமண வாழ்விலிருந்து பிரிய முடிவு செய்தோம். எல்லா புத்தகமும் அட்டை பக்கம் முதல் அட்டை பக்கம் வரை படிப்பதாக இருக்காது. அதற்காக அந்த புத்தகம் நன்றாக இல்லை என்று அர்த்தமில்லை.

அல்லது யாராலும் படிக்க முடியாது என்பதல்ல.. சில முடிக்காமலேயே முடிந்து போகும். அதுபோல்தான் இந்த வாழ்க்கை. ரோஹித்துடன் இத்தனை நாள் வாழ்ந்ததில் மறக்க முடியாத தருணங்கள் தந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர் என்றும் என்னை கவர்ந்தவர்தான். எதிர்காலம் உங்களுக்கு நன்றாக அமையட்டும்’ என எங்கிருந்தாலும் வாழ்க பாணியில் மாஜி கணவருக்கு பிரியாவிடை தந்திருக்கிறார் சுவதோ பாசு.

Tags : Suveda Basu ,
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!