×

விஜய் சேதுபதி கதையில் புதுமுகங்கள்

பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி தயாரித்து நடித்த படம், ஆரஞ்சு மிட்டாய். இக்கதையை பிஜு விஸ்வநாத்துடன் இணைந்து விஜய் சேதுபதி எழுதியிருந்தார். இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படத் துக்கு சென்னை பழனி மார்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பிஜு விஸ்வநாத் இணைந்து தயாரித்து இயக்கி வருகிறார்.

அவருடன் இணைந்து கதை எழுதி தயாரிக்கும் விஜய் சேதுபதி, இதில் நடிக்க வில்லை. நிறைய புதுமுகங்கள் நடிக்கின்றனர்.  நிரஞ்சன் பாபு  இசையில் விக்னேஷ் ஜெயபால் பாடல்கள் எழுதுகிறார்.

Tags : newcomers ,Vijay Sethupathi ,
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...