×

சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்து மிட்டனமல்லி கண்டிகை பகுதியை சேர்ந்தவர் 13வயது  . இவர், கரலப்பாக்கம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பெற்றோர் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். எனவே, தாத்தா வீட்டில் தங்கி சிறுமி பள்ளிக்கு சென்று வந்தார். இவரது தாத்தா பால் வியாபாரம் செய்து வருகிறார். அப்பகுதியில், உள்ள வீடுகளுக்கு சிறுமியும் பால் கொண்டு செல்வது வழக்கம். இதனை தொடர்ந்து, கடந்த 30ம் தேதி காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.. போலீசார் விசாரணை செய்ததில், சிறுமிக்கு புதிய கண்ணியம்மன் நகர் மோரை பகுதியை சேர்ந்த விக்கி (19) என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று இருவரும் சென்னை கடற்கரையில் இருப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் இருவரையும் முத்தாபுதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு அளித்து வந்து விசாரணை செய்தனர். இதில் விக்கி என்பவர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. எனவே,போக்சோ சட்டத்தில் போலீசார்  விக்கியை கைது செய்தனர். …

The post சிறுமியிடம் பாலியல் பலாத்காரம்; போக்சோவில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Boxo ,Awadi ,Mitanamalli Kandai ,Karalapakam ,Dinakaran ,
× RELATED சிறுமியின் கை, கால்களை கட்டி பாலியல் தொந்தரவு: போக்சோவில் முதியவர் கைது