பெரியகுளம் : தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி உள்ளது. விடுமுறை மற்றும் கோடை காலங்களில் தேனி மாவட்டம் மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களிலிருந்தும் தினசரி சுற்றுலாப் பயணிகள் வந்து அருவியில் குளித்துச் செல்வர். மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல், வட்டக்கானல் பகுதியில் பெய்யும் மழையால், இந்த அருவிக்கு நீர்வரத்து ஏற்படும்.நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர் மழை பெய்ததால், அருவியில் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை தடை விதித்தது. நேற்று காலை முதல் அருவியில், வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் தெரிவித்துள்ளார்….
The post வெள்ளப்பெருக்கு குறைந்து நீர்வரத்து சீரானது கும்பக்கரையில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.
