×

பத்திரப்பதிவுத்துறையில் உதவி பதிவுத்துறை ஐஜி 7 பேர் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் உதவி பதிவுத்துறை தலைவர்கள் 7 பேரை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் உதவி பதிவுத்துறை தலைவர் சத்திய பிரியா தென்சென்னை மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), சென்னை சரக உதவி பதிவுத்துறை தலைவர் கீதா, சேலம் (மேற்கு) மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), உதவி பதிவுத்துறை தலைவர் சுரேஷ்குமார், திருச்சி சரக உதவி பதிவுத்துறை தலைவராகவும், உதவி பதிவுத்துறை தலைவர் ராஜா திருச்சி மாவட்ட பதிவாளராகவும் (நிர்வாகம்), தென்சென்னை மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) மீனாகுமாரி சென்னை சரக உதவி பதிவுத்துறை தலைவராகவும், சென்னை பதிவுத்துறை பயிற்சி நிலையம் உதவி பதிவுத்துறை தலைவர் இந்திரா, சென்னை சரக உதவி பதிவுத்துறை தலைரவாகவும், உதவி பதிவுத்துறை தலைவர் மஞ்சுளா, சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலக உதவி பதிவுத்துறை தலைவராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post பத்திரப்பதிவுத்துறையில் உதவி பதிவுத்துறை ஐஜி 7 பேர் பணியிட மாற்றம்: அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Registration ,Govt. ,Chennai ,Registrar Secretary ,Jyoti Nirmalasamy ,Deeds Registration Department ,Dinakaran ,
× RELATED பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு...