சென்னை: பெண் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய கல்லூரி காலத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் பரப்பப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 70க்கும் மேற்பட்ட இணைய தளங்களில் பகிரப்பட்டுள்ள அந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வீடியோக்களை இணையதளங்களில் இருந்து நீக்க இயலாது என்று ஒன்றிய அரசு தரப்பில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று முறையீடு செய்யப்பட்டது. வீடியோ காட்சிகளை நீக்க சமூக வலைதளங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, பெண் வழக்கறிஞர் தொடர்பான வீடியோ புகைப்படங்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டார்.
The post பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் உள்ள அனைத்து இணைய தளங்களையும் முடக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.
