சென்னை: சென்னை காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 48 நான்கு சக்கர வாகனம் உட்பட மொத்தம் 234 வாகனங்கள் வரும் 2ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை: சென்னை காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 46 நான்கு சக்கரம் வாகங்கள் மற்றும் 188 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 234 வாகனங்கள் வரும் 2ம் ேததி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் காலை 10 மணிக்கு பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஏலத்திற்கான முன்பதிவு வரும் 26ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் ஆதார் அட்டை மற்றும் ஜிஎஸ்டி பதிவெண் சான்றுடன் கட்டணம் ரூ.1000 செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பணம் செலுத்தி பதிவு செய்த ஏலதாரர்கள் மற்றும் ஏலக்குழுவினர் ஆகியோர் முன்னிலையில் பகிரங்க ஏலம் நடைபறும். ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களுக்கான ஏலத்தொகையில் அன்றைய தினம் 25 சதவீதம் தொகையும், மீதமுள்ள ஏலத்தொகையான 75 சதவித தொகை மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் மறுநாள் செலுத்திய பின் விற்பனை ஆணை வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post சென்னை காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 234 வாகனங்கள் 2ம் தேதி ஏலம் appeared first on Dinakaran.
